Skip to main content

MoT Editor

• மனிதகுலத்தின் கலாசார விழுமியங்களையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் • பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லை 'AI உட்கட்டமைப்பு' ஆகும்

  • புதுடெல்லியில் நடைபெறும் 'AI Impact 2026' மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் இன்று (19) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு குறித்த இலங்கையின் நோக்கம் என்பது தனித்து வெற்றியைப் பெறுவது அல்ல எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தனது நாடு AI உட்கட்டமைப்பை பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாகப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.எனவே, பின்வரும் 04 அடிப்படை விடயங்களை மையமாகக் கொண்ட பிராந்திய ஒத்துழைப்பை இலங்கை முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நலனுக்காகப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 'AI Impact 2026' மாநாடு புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதன் அரச தலைவர்கள் அமர்வின் ஆரம்ப நிகழ்வு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), அபுதாபி முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan), பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா (Lula de Silva) மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அரச தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டுடன் இணைந்ததாக புதுடில்லி பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் அரச தலைவர்கள் பார்வையிட்டனர். அத்துடன், மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் குழுவாக புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டனர்.

AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை வருமாறு: செயற்கை நுண்ணறிவானது பொருளாதாரங்கள், அரச நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் சமூகங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறப்பான தருணத்தில், புதுடில்லியில் உங்களுடன் இணைந்துகொள்வதை நான் கௌரவமாகக் கருதுகிறேன். கடந்த நூற்றாண்டுகளில் தொழில்மயமாக்கல் ஏற்படுத்தியதைப் போலவே, தேசிய வளர்ச்சிப் பாதையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாற்றத்தக்க சக்தியாக AI தொழில்நுட்பம் விளங்குகின்றது.

எவ்வாறாயினும், AI தொழில்நுட்பத்தில் வலுவடைந்துள்ள நாடுகளுக்கும் அத்தகைய வசதியற்ற நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் இடைவெளியானது, பல நாடுகளின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பாரிய ஆபத்தை உருவாக்குகிறது. இவ்வாறு பின்தள்ளப்படும் நாடுகள் உலகளாவிய வளர்ச்சி மற்றும் நவீன பொருளாதார வாய்ப்புகளிலிருந்து மேலும் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு உள்ளாக நேரிடும். இதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் அனைவரையும் உள்ளடக்கிய, நீதியான மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களைப் போலவே இலங்கையும் AI தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, சரியான நோக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் நம்பிக்கையுடனும் தயக்கமின்றியும் செயற்பட வேண்டிய தீர்மானமிக்க தருணம் வந்துள்ளது.

தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் மனித வளம் இலங்கையில் உள்ளது. மேலும், வலுவான சட்டக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுடன் இணைக்கப்பட்ட பொருளாதார கலாசாரமும் எம்மிடம் உள்ளன. நாம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பிற்கான சட்டக் கட்டமைப்புகளை நவீனமயப்படுத்தி, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்வதுடன், புத்தாக்கங்களை ஊக்குவிக்கக்கூடிய பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கக்கூடிய நிறுவனங்களை வலுப்படுத்துகிறோம்.

AI தொழில்நுட்பத்தின் நோக்கங்கள், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து உலகம் விவாதித்து வருகிறது. ஆனால் இதுவரை கவனிக்கப்படாத ஒரு முக்கியமான அம்சத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுதான் கலாசார பொருத்தப்பாடு. இந்த தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் கலாசார மதிப்புகள் மற்றும் திறன்களை மேலும் மேம்படுத்த உதவ வேண்டும். உலகத்தரம் வாய்ந்த AI தொழில்நுட்பம் ஒரு சில மொழிகள் மற்றும் கருத்தியல்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டால், நமது தனித்துவமான கலாசார பன்முகத்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு, தமது மொழி மற்றும் கலாசாரம் மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையாகும். அத்தகைய கலாசார பொருத்தப்பாடுகளை அடைய, விரிவான ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பும் அவசியம். இதன்போது, நமது உள்ளூர் மொழிகளையும் கலாசார அறிவையும் டிஜிட்டல் மயமயப்படுத்தி, அவற்றை செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க வேண்டும். அத்துடன், பாதுகாப்பில் அதிகளவில் கவனம் செலுத்துவதும் முக்கியம். AI இன் பாதகமான விளைவுகளிலிருந்து நமது கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை நிறுவ வேண்டும்.

தனித்து வெற்றியை அடைவது எமது தொலைநோக்குப் பார்வை அன்றி ஒருங்கிணைவதாகும். பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாக AI உட்கட்டமைப்பு வசதிகளை நாம் பார்க்கிறோம். எனவே, இலங்கை ஒரு பிராந்திய ஒத்துழைப்பை முன்மொழிகிறது. இதன்போது, குறைந்த விலையில் பெறக்கூடிய மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக்கொண்ட மொழி தரவுத்தொகுப்புகள், பொதுவான மதிப்பீட்டு முறைகள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் மற்றும் கூட்டு திறன் மேம்பாடு ஆகிய 04 பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டமைவது மிகவும் முக்கியம் ஆகும்.

இந்த முயற்சி, AI இன் நன்மைகளை பரந்த மற்றும் சமமான முறையில் அணுகுவதற்கு நம் அனைவருக்கும் உதவும் என்று நான் நம்புகிறேன். இந்த நிலைமையில், தேசிய மற்றும் பிராந்திய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய AI திறனுடன் கூடிய தரவு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை இலங்கை ஆராய்ந்து வருகிறது.

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப திறன்களில் உலக அளவில் தலைமையை அடைந்து வருகின்ற இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு, நிலைபேறான, பாதுகாப்பான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள பிராந்திய AI தரவு மைய திறன்களை நிறுவுவதற்கு இலங்கைக்கு பெரும் ஆற்றல் உள்ளது.

எந்தவொரு நாட்டுக்கும் தனியாக AI இற்கு தயாரான எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். உலகம் மற்றும் இந்தப் பிராந்தியத்தியத்தில் உள்ள நாடுகளின் கருத்துக்களையும் ம் கவனத்தில் கொண்டு, புது டில்லியில் நாம் இணங்கிய கூட்டு அறிக்கையில் இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவம், சிறப்பம்சமாக நோக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

எனவே, யாரையும் கைவிடாத வகையிலும் நெறிமுறைகளின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு குறித்து பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ளவும், கூட்டாக முன்னோக்கிச் செல்லவும் இலங்கை தயாராக உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்'' எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

2026 பெப்ரவரி 10 ஆம் திகதி கொழும்பிலுள்ள பழைய பாராளுமன்றக் கட்டடத்தில், முக்கியமான அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் (NCSOC) இணைப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அமுல்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. Sri Lanka CERT மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பு, நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த விடயம் மட்டுமல்லாது, அது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது.

முக்கியமான தகவல் உட்கட்டமைப்புகளை இயக்கும் அனைத்து அரச நிறுவனங்களையும் தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைப்பதில் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதற்கான கொள்கை மட்டத்திலான தீர்மானங்கள் ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள அரச நிறுவனங்களை இந்த மையத்துடன் இணைக்கும் இரண்டாம் கட்டப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்பட உள்ளன. குறிப்பாக, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய அரச நிறுவனங்கள் தேசிய தணிக்கை அலுவலகத்தின் ஊடாக தணிக்கை செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து அரச துறை அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதன் அவசியமும் இச்சமயம் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகரும் வேளையில், சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் (Cyber Resilience) என்பது நிர்வாகம் மற்றும் பொதுச் சேவை வழங்கலின் அடிப்படை அங்கமாக கருதப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய பொறிமுறையானது அரச இணையதளங்கள் சிதைக்கப்படுதல், ரான்சம்வேர் தாக்குதல்கள் மற்றும் தரவு கசிவுகள் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து அத்தியாவசிய சேவைகளைப் பாதுகாக்கவும், இடையூறுகளை முகாமைத்துவம் செய்யவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தின் ஊடாக, அரச நிறுவனங்கள் நிகழ்நேர அச்சுறுத்தல் கண்காணிப்பு, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த சம்பவ எதிர்வினை திறன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, இந்த முயற்சி வெறும் இணக்கப்பாட்டு நடவடிக்கை மட்டுமல்லாது, நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் மீளெழுச்சித் திறனுக்கான ஒரு முதலீடு என்றும் விவரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர் இன்ஜினியர் எரங்க வீரரத்ன, அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், Sri Lanka CERT நிறுவனத்தின் தலைவர் திலக் பத்திரகே, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி கனிஷ்க கருணாசேகர மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், முக்கியமான தகவல் உட்கட்டமைப்புகளைக் கொண்ட அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

இந்தியாவின் பரோடா அருங்காட்சியகத்தில் அதிஉயர்ந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்ததும், இதற்கு முன்னர் ஒருபோதும் இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படாததுமான வரலாற்றுச் சிறப்புமிக்க 'தேவனி மௌரி' சர்வக்ஞ புத்தர் புனித தாதுக்கள் (Sarvagna Dhathu), முதன்முறையாக இலங்கைப் பொதுமக்களின் வழிபாட்டிற்காக கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராமய விகாரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விசேட நிகழ்வை முன்னிட்டு, நேற்று (07) கங்காராமய விகாரைக்கு விஜயம் செய்து புனித தாதுக்களை வழிபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன பின்வருமாறு குறிப்பிட்டார்: பெப்ரவரி 5ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு, 24 மணிநேரமும் தொடர்ச்சியாக இந்தப் புனித தாதுக்கள் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். இது இலங்கை பௌத்த சமூகத்திற்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய மிகவும் அரிய சந்தர்ப்பம் எனவும், இதன் வெற்றியை உறுதிப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெருந்தொகையான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வழிபாட்டிற்கு வருவோருக்கு வசதியாக விகாரை வளாகத்தை மையமாகக் கொண்டு அதிகபட்ச வசதிகளும் நிறுவன ரீதியான நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இப்புனித தாதுக்களை நேரில் தரிசித்து வழிபடுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதி அமைச்சர் மரியாதையுடன் அழைப்பு விடுத்தார். அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டல்களை வழங்க அரசாங்கம் விகாரையின் கியகரணக் குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த அரிய மற்றும் விலைமதிப்பற்ற வாய்ப்பைத் தவறவிட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

இலங்கையின் டிஜிட்டல் ஆளுமை கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி, ‘GovPay’ டிஜிட்டல் போக்குவரத்து அபராதக் கொடுப்பனவு முறைமை 2026 பெப்ரவரி 3 ஆம் திகதியன்று நாடு தழுவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் 2025 ஏப்ரலில் 11 காவல்துறை நிலையங்களில் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் முறையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தொழில்நுட்பத் தீர்வு என்பதற்கும் மேலாக, திறமையான, வெளிப்படையான மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட பொதுச் சேவையை வழங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல், டிஜிட்டல் ஊடகங்கள் ஊடாக 115 மில்லியன் ரூபாவிற்கும் அதிக போக்குவரத்து அபராதத் தொகையை அரசாங்கம் வசூலித்துள்ளதுடன், வெற்றிகரமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 86,000-ஐத் தாண்டியுள்ளது. நாட்டின் அனைத்து முன்னணி வங்கிகள் மற்றும் நிதித் தொழில்நுட்ப (fintech) செயலிகள் மூலம் இக்கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும். ஒரு முக்கிய சிறப்பம்சமாக, இந்த வாரம் முதல் பொதுமக்கள் நாடு முழுவதும் உள்ள 55,000-இற்கும் மேற்பட்ட 'Dialog eZ Cash' முகவர்கள் மூலம் பணமாக அபராதத்தைச் செலுத்த முடியும். இது பொதுமக்களுக்கான அணுகலையும் வசதியையும் பெருமளவில் மேம்படுத்துகிறது.

டிஜிட்டல் பொருளாதாரம், போக்குவரத்து மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுகள், இலங்கை காவல்துறை, ICTA, லங்காபே (LankaPay) மற்றும் ஸ்ரீலங்கா டெலிகாம் (SLT) உள்ளிட்ட பல பங்குதாரர்களின் கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பின் விளைவாகவே இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. 2024 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு முறைகள் மூலம் தேசிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில், வாகன ஓட்டுநர்கள் எங்கிருந்தும் உடனடியாக அபராதத்தைச் செலுத்தி, தமது ஓட்டுநர் உரிமங்களை விரைவாகத் திரும்பப் பெற முடியும். இது ஒட்டுமொத்த இலங்கை பொதுமக்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நடைமுறை நன்மையை வழங்குகிறது.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டின் முன்னணி தொழில்முறை அமைப்பான BCS இலங்கை பிரிவு (The Chartered Institute for IT) ஏற்பாடு செய்த “டெக் லீடர்ஸ் கனெக்ட் ‘26” மாநாடு, அண்மையில் கொழும்பு கோர்ட்யார்ட் பை மேரியட் (Courtyard by Marriott) ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடுத்த தசாப்தம், அதன் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் முதன்மை நோக்கமாகும்.

இந்நிகழ்வின் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் இன்ஜினியர் எரங்க வீரரத்ன, இலங்கையின் எதிர்கால டிஜிட்டல் பார்வை மற்றும் அந்த பார்வையை யதார்த்தமாக மாற்றுவதற்கான செயல்முறைகள் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவரது உரையில், வரவிருக்கும் தசாப்தத்திற்கான இலங்கையின் தேசிய டிஜிட்டல் பார்வை என்பது வெறும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு அப்பால் சென்று, குடிமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் தேசிய பொருளாதாரத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட முழுமையான ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை (Digital Ecosystem) உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதி அமைச்சர் வீரரத்ன வலியுறுத்தினார்.

இந்த நோக்கை நனவாக்கத் தேவையான பல முக்கிய முன்னுரிமைகளைச் சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு குடிமகனும் எளிதில் அணுகக்கூடிய பாதுகாப்பான டிஜிட்டல் உள்கட்டமைப்பை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

தரவு சார்ந்த ஆட்சி முறையின் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதும், உலகளாவிய சந்தைகளில் போட்டியிடக்கூடிய கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதும் அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள்களில் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதி அமைச்சர் விளக்கினார்.

குறிப்பாக, பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் அடையாள முறையை (Digital Identity System) விரைவுபடுத்துதல் போன்ற முக்கிய முயற்சிகள் மூலம் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இப்பயணத்தில் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்த பகுப்பாய்வையும் அவர் வழங்கினார். காலாவதியான சட்டக் கட்டமைப்புகளைப் புதுப்பித்தல், தேவையான நிதி ஒதுக்கீடுகளைத் திறம்பட நிர்வகித்தல் மற்றும் திறமையான நிபுணர்களை நாட்டிற்குள்ளேயே தக்கவைத்தல் ஆகியவை வெற்றிகரமான செயல்பாட்டிற்கு இருக்கும் மிக முக்கியமான தடைகளாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வின் முக்கிய உரையை சிஸ்கோ லேப்ஸ் (Sysco LABS) ஸ்ரீலங்காவின் மேலாண்மை இயக்குனர் திரு. துஷேர காவடவத்த ஆற்றினார். இதனைத் தொடர்ந்து, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ভারপ্রাপ্ত செயலாளர் திரு. வருண ஸ்ரீ தனபால ஆகியோர் கலந்துகொண்ட சிறப்பு குழு விவாதம் நடைபெற்றது. திரு. ஆலன்சோ டொல் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்த விவாதத்தில், தொழில்துறையின் தயார்நிலை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை நிறுவனங்களின் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகள் கலந்துரையாடப்பட்டன.

image 01image 02image 03

MoT Editor

இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட விவசாய நிறுவனக் கட்டமைப்பு (AEF), தரவுப் பகிர்வுக் கொள்கை மற்றும் CROPIX தேசிய டிஜிட்டல் தளம் ஆகியன நேற்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் நிதி உதவியுடன், விவசாய அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முன்முயற்சி, நாட்டின் விவசாய ஆட்சி முறையை நவீனமயமாக்குவதன் மூலம் ஆதாரபூர்வமான முடிவெடுப்பதற்கான வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.

சிதறிக்கிடக்கும் தரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI), அரச நிறுவனங்களுக்கிடையில் திறமையான தரவுப் பகிர்வை அனுமதிப்பதன் மூலம் இத்துறையில் உள்ள தடைகளை நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் உரையாற்றிய விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி. லால் காந்த, இது இலங்கையின் விவசாய ஆட்சியில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக அமையும் என வலியுறுத்தினார். டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ இஞ்சினியர் எரங்க வீரரத்ன குறிப்பிடுகையில், அமைப்புகளுக்கிடையே தானியங்கி தரவு பரிமாற்றம் மூலம் திறமையான சேவைகள் வழங்கப்படும் என்பதால், இனி விவசாயிகள் ஆவண வேலைகளுக்காக அலைய வேண்டியதில்லை எனத் தெரிவித்தார். இதேவேளை, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, இந்த முன்முயற்சியானது தேசிய டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலை விவசாயத் துறைக்கு விரிவுபடுத்துவதுடன் தரவு சார்ந்த கொள்கை தாக்கத்தை செயல்படுத்துகிறது எனக் குறிப்பிட்டார்.

CROPIX அமைப்பானது தேசிய பயிர் பதிவேடு, சாகுபடி தரவு, விளைச்சல் கணிப்பு மற்றும் நிகழ்நேர அறிக்கையிடல் ஆகியவற்றை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

இலங்கையின் ஏற்றுமதி திறன் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட "ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2026" என்ற சர்வதேச கண்காட்சியை இன்று ஜனவரி 9 ஆம் தேதி தொடங்குவதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கண்காட்சிக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.srilankaexpo.lk, உள்ளூர் கண்காட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு வாங்குபவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய உதவும் வகையில் இந்த நிகழ்வில் தொடங்கப்பட்டது.

ஜூன் 18–21, 2026 அன்று பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இந்த சர்வதேச கண்காட்சி, இலங்கையின் ஏற்றுமதி திறன்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும்.

"ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2026" இன் அதிகாரப்பூர்வ தொடக்க விழா கொழும்பின் கனவு நகரத்தில் உள்ள சினமன் லைஃப் இல், தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி; தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு துணை அமைச்சர் திரு. சதுரங்க அபேசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்; வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் திரு. அருண் ஹேமச்சந்திர; டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் திரு. எரங்க வீரரத்ன; அமைச்சின் செயலாளர் திருமதி. திலகா ஜெயசுந்தர; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய; இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மங்கள விஜேசிங்க; மற்றும் பிற அமைச்சக செயலாளர்கள், இராஜதந்திரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், வங்கிகள், வர்த்தக சபைகள், இலங்கை எக்ஸ்போ 2026 உடன் இணைந்து பணியாற்றும் நிறுவனத் தலைவர்கள், பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன்.

image 01image 02image 03image 05image 04image 06

MoT Editor

பின்லாந்து, OULU பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), மெட்ராஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மற்றும், கௌரவ டிஜிட்டல் பிரதி அமைச்சர், பொறியாளர் எரங்க வீரரத்ன, ஆகியோருக்கும் இடையே நேற்று (07) நாடாளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

சர்வதேச கல்வி ஒத்துழைப்பு மற்றும் புதுமை சார்ந்த ஆராய்ச்சியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இலங்கையில் ஒரு தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவுதல் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது. இலங்கையின் டிஜிட்டல் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கான பிராந்திய மையமாக நாட்டை நிலைநிறுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

OULU பல்கலைக்கழகத்தின் 6G முதன்மைத் திட்டம் மற்றும் IIT மெட்ராஸின் புதுமை சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்ட அதிநவீன ஆராய்ச்சி முயற்சிகள் குறித்து விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன. புதுமைகளை மேம்படுத்துதல், உலகளாவிய கூட்டாண்மைகளை வளர்ப்பது மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை ஆதரிப்பதில் வலுவான கவனம் செலுத்தி, இந்த கலந்துரையாடல் முன்மொழியப்பட்ட வசதியின் நோக்கங்கள், கட்டமைப்பு மற்றும் நீண்டகால தாக்கம் குறித்த விரிவான உரையாடலின் தொடக்கத்தைக் குறித்தது.

டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் (பதில்) வருண தனபால, SLT-மொபிடெல் தலைவர் டாக்டர் மோதிலால் டி சில்வா, OULU பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அரி புட்டு (ஆன்லைன்), IIT மெட்ராஸின் பேராசிரியர் டேவிட் கோயில்பிள்ளை, பேராசிரியர் நந்தன ராஜதேவா, டாக்டர் சங்கர் ராமன், கித்சிறி லியனகே (UoP), மற்றும் அரசு அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

image 02image 03image 05image 04image 06

MoT Editor

தித்வா சூறாவளிக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம் மற்றும் கல்வியை மையமாகக் கொண்டு, இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சியை ஆதரிப்பதற்காக டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி 420 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டதன் மூலம் இந்த உறுதிமொழி முறைப்படுத்தப்பட்டது.

தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப இந்த மீட்பு முயற்சிகளை செயல்படுத்த அரசாங்கத்திற்கும் டயலொக்கிற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகுக்கிறது.

இந்த கூட்டாண்மையின் கீழ், சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனை, கொத்மலை பிரதேச மருத்துவமனை, மதுல்கேலே பிரதேச மருத்துவமனை மற்றும் புத்தளம் அடிப்படை மருத்துவமனை ஆகியவற்றில் வசதிகளை மீட்டெடுப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் டயலொக் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும். புயலால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கணினி ஆய்வகங்களை புதுப்பித்து, மாணவர்கள் ICT தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வசதிகளை , அவர்களின் கல்வியைத் தொடரவும் உதவும் வகையில், டயலொக் கல்வி அமைச்சகத்துடன் கூட்டு சேரும்.

கௌரவ பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, கௌரவ. டிஜிட்டல் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, அமைச்சு செயலாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் டயலொக் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

image 01image 02image 05image 04image 06

MoT Editor

டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தில் இன்று டிஜிட்டல் பிரதி அமைச்சர் பொறியாளர் எரங்க வீரரத்ன மற்றும் இலங்கைக்கான கஜகஸ்தான் குடியரசின் தூதர் திரு. செர்ஜி விக்டோரோவ் ஆகியோருக்கு இடையே ஒரு பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கஜகஸ்தானின் AI தரவு மையங்களில் முன்னேற்றம், தேசிய AI முயற்சிகள் மற்றும் அரசாங்க தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மாதிரிகள் மூலம் அரசாங்க மென்பொருள் தீர்வுகளை வழங்குதல், அவர்களின் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கும் IT மற்றும் டிஜிட்டல் கல்வி கட்டமைப்புகள் பற்றிய நுண்ணறிவுகள் ஆகியவை கவனம் செலுத்தப்பட்டன.

இந்த உரையாடல், அறிவு பரிமாற்றம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் இரு நாடுகளின் பொது மற்றும் தனியார் துறை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மைகள் உள்ளிட்ட IT துறையில் சாத்தியமான இருதரப்பு ஒத்துழைப்பு வாய்ப்புகளையும் ஆராய்ந்தது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதுமை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வளர்ச்சியை ஊக்குவிக்க ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு கட்சிகளும் மீண்டும் உறுதிப்படுத்தின.

image 01image 02image 03